நிமிடத்திற்கு 7200 டிக்கெட்டுக்கள்... அமலுக்கு வந்தது ‘அடுத்த தலைமுறை இ -டிக்கெட் திட்டம்’

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பொதுமக்கள் பயனடையும் வகையில் ரயில்வேயில் ஒரே நிமிடத்தில் 7,200 பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யும், ‘அடுத்த தலைமுறை மின்னணு பயணச்சீட்டுத் திட்டம்' நேற்று முதல் அமலுக்கு வந்தது.

கால்கடுக்க வரிசையில் நின்று பயணச் சீட்டு பதிவு செய்யும் முறையை இணையதள பயணச் சீட்டு பதிவு முறை எளிதாக்கியது. ஆனபோதும், குறைந்த வேகம் காரணமாக இணையதள பயணச்சீட்டு முன்பதிவும் மக்களுக்கு சில அசௌகரியங்களைத் தந்து வந்தது.

அதனைக் களையும் வகையில் ‘அடுத்த தலைமுறை மின்னணு பயணச் சீட்டுத் திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டது. இத்திட்டத்தை நேற்று மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சதானந்த கவுடா தொடங்கி வைத்தார்.

Railway minister launches next gen e-ticketing system: 7,200 tickets per minute

அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது :-

மின்னணு மயம்...

நாட்டின் வளார்ச்சியில் ரயில்வே துறையின் பங்கினை கருத்தில் கொண்டே இத்துறையின் அனைத்து செயல்பாடுகளையும் மின்னணு மயமாக்க வேண்டும் என்பதை பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

ஆய்வு...

ரயில்வே ஊழியர்களுக்காக மருத்துவ நிர்வாகத் தகவல் முறையைக் கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து வருகிறேன்' எனத் தெரிவித்தார்.

ரூ. 180 கோடி செலவில்...

இந்த அடுத்த தலைமுறை மின்னணு பயணச் சீட்டுத் திட்டம், மத்திய ரயில்வே தகவல் அமைப்பால் ரூ. 180 கோடி செலவில் உருவாக்கப் பட்டுள்ளது.

முன்பதிவு...

இதன் மூலம் நிமிடத்திற்கு 7,200 பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்ய இயலும். பழைய முறைப்படி ஒரு நிமிடத்தில் 2000 பயணச் சீட்டுகளே முன்பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பலமடங்கு பயன்...

அதேபோல், முன்னதாக ஒரே நேரத்தில் 40,000 பேர் மட்டுமே பயனடைந்து வந்த நிலை மாறி, இப்புதிய திட்டம் மூலம் 1,20,000 பேர் பயனடைய வாய்ப்பு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+