டீசல் விலை குறைந்தாலும்... ரயில் கட்டணத்தை குறைக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு
பெங்களூரு: டீசல் விலை குறைந்து இருந்தாலும் ரயில் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை என மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் புதிய ரயில்களின் சேவையை தொடங்கி வைக்கும் விழாவில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் சுரேஷ் பிரபு. அப்போது அவர் கூறியதாவது:-

பயணிகளுக்கான செலவில் இருந்து 50 சதவீதத்தை மட்டுமே ரயில்வே துறை திரும்ப பெறுகிறது. பயணிகளுக்கு ஏற்கனவே அதிகளவில் மானியம் வழங்கப்படுகிறது. அதனால் டீசல் விலை குறைந்து இருந்தாலும் ரயில் கட்டணம் குறைக்க வாய்ப்பு இல்லை. அதிவேக ரயில் சேவையை தொடங்க அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்களின் வேகத்தையும் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவு ரயில்கள் அதிக நிறுத்தங்களில் நிற்பதால் அதன் வேகத்தை அதிகரிக்க முடியவில்லை. வருகிற ரயில்வே பட்ஜெட்டில் புதிய செயல் திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்.
அவுரா ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளி ஒருவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் தாக்கி இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளிடம் தவறான முறையில் நடந்துகொள்ளக்கூடாது என்று பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டுள்ளோம். மாற்றுத்திறனாளிகளிடம் மனித நேயத்துடனும், மிகவும் மரியாதையுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளேன். யாராவது ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த காலங்களில் இவ்வாறு ஒழுங்கீனமாக நடந்து கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதால் இதுபோல் ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உதவுகிறது.
பயணிகளிடம் மனித நேயத்துடனும், மரியாதையுடனும் நடந்துகொள்ளும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு பயிற்சி வழங்கும் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications