For Daily Alerts
Just In
சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ரயில்வே அமைச்சர் கண்டனம்
பெங்களூர்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய இரட்டை குண்டுவெடிப்பு குறித்து மத்திய அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:
சென்னை குண்டுவெடிப்பு சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
இதில் பெங்களூரிலிருந்து விஜயவாடா சென்ற இளம்பெண் சுவாதி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ரயில்வே உயரதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
ரயில்வே போலீஸாருடன் இணைந்து தமிழக போலீஸாரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
Comments
English summary
Union Railway Minister Mallikarjun Kharge said that, Chennai blast investigation is going on. Railway and state police are working together on Thursday.
Story first published: Thursday, May 1, 2014, 12:50 [IST]