சபரிமலையில் தொடர்ந்து பலத்த மழை.. ஐயப்ப பக்தர்கள் அவதி
பத்தனம்திட்டா: சபரிமலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பக்தர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.
கேரள நிலம் சபரிமலையில் மண்டல பூஜை சீசன் கடந்த 16ம் தேதி துவங்கியது. அன்று முதல் கேரளாவி்ல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக வெறிச்சோடியிருந்த மழை நேற்று மதியம் முதல் மீண்டும் துவங்கியது.

பலத்த இடி,மின்னலுடன் இரண்டு மணி நேரம் பெய்த மழையின் காரணமாக ஐயப்ப பக்தர்கள் சன்னிதானம் செல்ல முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். மேலும் பெரு வழிப் பாதையில் செல்லும் பக்தர்கள் கவனத்துடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பம்பைஆற்றில் மழையின் காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளம் வெள்ளம் ஏற்ப்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளம் காரணமாக பக்தர்கள் கவனமாக குளிக்க வேண்டும் என்ற அறிவிப்பு கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக சபரிமலையில் கடுமையான குளிரும் ஏற்ப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications