புழுக்கத்தால் தவித்த பெங்களூர்வாசிகளுக்கு நிம்மதி.. வெளுத்த மாலை நேர மழை!
பெங்களூர்: பெங்களூரில் மலை நேரத்தில் இன்று நல்ல மழை வெளுத்து வாங்கியது.
பெங்களூரில் கடந்த சில நாட்களாகவே பகல் நேர வெப்ப நிலை அதிகமாக காணப்பட்டது. புழுக்கமாக இருப்பதாக மக்கள் உணர்ந்தனர். வழக்கமாக அக்டோபர் மாதத்தில் இருக்கும் வெப்பத்தைவிட இப்போது கூடுதலாக இருந்ததால் மக்கள் மின் விசிறிகளை கூடுதல் சக்தியில் இயக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
ஆனால் இன்று மாலை 5 மணிக்கு மேல் நகரின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. நகரின் மெஜஸ்டிக், மல்லேஸ்வரம், ராஜாஜிநகர், கே.ஆர்.மார்க்கெட், ஜெயநகர், பசவனகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்தது.
Heavy #rain in #Bengaluru #Malleshwara pic.twitter.com/T8pu35tCw2
— Vinayak Bhat (@vinayakmuroor) October 3, 2018
இருப்பினும் இன்னும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சந்தேகப்படும் அளவுக்கு புழுக்கம் மட்டும் குறையவில்லை என்கிறார்கள் பெங்களூர்வாசிகள்.