For Daily Alerts
Just In
கன்னியாகுமரி முதல் கர்நாடகாவரை நின்று ஆடும் ஓகி.. பெங்களூரிலும் விடிய விடிய மழை
பெங்களூர்: ஓகி புயலின் தாக்கம் கர்நாடக மாநில தலைநகரம் பெங்களூர் வரை எதிரொலிக்கிறது.
கன்னியாகுமரிக்கும், கர்நாடகாவுக்கும் சுமார் 650 கி.மீ தூரம் இருந்தபோதிலும், பெங்களூரில் நேற்று இரவு 11 மணிக்கு மேல் ஆரம்பித்த மழை தொடர்ந்து வருகிறது. மிதமான மழையாக பெய்து வந்தாலும், சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. டிசம்பர் மாத கடும் குளிருடன் மழை குளிரும் இணைந்துள்ளதால் நகரவாசிகள் பெரும் சிரமப்படுகிறார்கள்.
பல இடங்களில் மின்சார சப்ளையும் இல்லை என்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர். மழை காரணமாக நகரின் பல பகுதிகளில் காலை வேளையில் டிராபிக் நெரிசல் ஏற்பட்டது.
புயல் அரபிக்கடலை நோக்கி செல்வதால் அதன் தாக்கத்தால் இன்று இரவு வரை பெங்களூரில் மழை நீடிக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
Comments
English summary
Rain lashes Bengaluru as cyclone ockhi moving towards Arabian sea.
Story first published: Friday, December 1, 2017, 9:10 [IST]