பெங்களூர் மக்களுக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி
பெங்களூர்: வெயில் கொளுத்தி எடுக்கும் பெங்களூரில் இன்னும் 5 நாட்களில் மழை பெய்யும் என்ற தகவலை தெரிவித்து வானிலை ஆய்வு மையம் மக்கள் முகத்தில் சிரிப்பை வரவழைத்துள்ளது.
கோடை காலம் வந்தால் பெங்களூர் செல்லலாம் அங்கு குளு குளுவென்று இருக்கும் என்று கூறிய காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. பெங்களூரில் சென்னைக்கு போட்டியாக வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது என்று பெங்களூர்வாசிகள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு கோடை காலத்தில் பெங்களூரில் அதிகபட்சமாக 36.8 டிகிரி வெயில் அடித்தது. ஆனால் இந்த ஆண்டு தற்போதே வெயில் 36 டிகிரியை தொட்டுவிட்டது.
இந்நிலையில் வானிலை ஆய்வுத் துறை இயக்குனர் புட்டன்னா கூறுகையில்,
வரும் 8ம் தேதி நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம். அன்றில் இருந்து தொடர்ந்து 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும். நேற்று கர்நாடகாவின் சில பகுதிகளில் மழை பெய்தது. இன்னும் 5 நாட்களில் காற்று பெங்களூரை அடைந்து மழை பெய்யும். கடந்த சில நாட்களாக வெப்பம் 36 டிகிரியாகவே உள்ளது. இந்த அளவு வரும் நாட்களில் அதிகரிக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications