நிலமோசடி வழக்கில் இயக்குநர் ராஜமௌலிக்கு சம்மன்..24 ம் தேதிக்குள் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு
ஹைதராபாத்: இயக்குநர் ராஜமௌலிக்கு ஆந்திராவின் நாம்பல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருப்பது டோலிவுட்டில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சத்ரபதி, நான் ஈ, பாகுபலி போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கியவர் ராஜமௌலி. தற்போது பாகுபலி 2 படத்தின் படப்பிடிப்புகளில் ராஜமௌலி பிஸியாக இருக்கிறார்.
இந்நிலையில் நிலத்தை தருவதாக தன்னிடம் பணத்தை வாங்கிக் கொண்டு ராஜமௌலி ஏமாற்றி விட்டதாக அவர் மேல் நாம்பல்லி நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் புவனேஸ்வர் என்பவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இந்த வழக்கில் 3 முறைக்கு மேல் ராஜமௌலிக்கு நோட்டிஸ் அனுப்பி அவர் ஆஜராகாததால் தற்போது நாம்பல்லி நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பி இருக்கிறது.

ராஜமௌலி
ஸ்டூடன்ட் நம்பர் 1 படத்தின் மூலம் இயக்குனராக டோலிவுட்டில் அறிமுகமானவர் ராஜமௌலி. தொடர்ந்து மகதீரா, நான் ஈ போன்ற படங்கள் மூலம் முன்னணி இயக்குநர் என்ற அந்தஸ்தை எட்டிப் பிடித்தார். கடந்த வருடம் வெளியான பாகுபலி படத்தின் மூலம் தற்போது உலகளவில் ராஜமௌலியின் புகழ் பரவியிருக்கிறது.
நிலம் விற்பனை
ஐதராபாத் பஞ்சார ஹில்ஸ் பகுதியில் ‘லோட்டஸ்னஹ' என்ற அபார்ட்மெண்ட் உள்ளது. இந்த அபார்ட்மெண்ட் கீழ்தளத்தில் உள்ள 1120 சதுர அடி பிளாட்டை 2011-ம் ஆண்டு விற்பதற்கு ராஜமௌலி முன்வந்தார்.இதனை அறிந்த சினிமா தயாரிப்பாளர் புவனேஸ்வர் அதனை வாங்க ரூ.42 லட்சத்துக்கு வாங்க முன்வந்தார்.
முறைகேடாக
புவனேஸ்வர் முன்பணமாக 2.7 லட்சத்தை ராஜமௌலியிடம் கொடுத்த பின்னர் தான் அந்த அபார்ட்மெண்ட் சட்ட விரோதமாக கட்டப்பட்டது என்பது அவருக்கு தெரியவந்தது. மேலும் மின்சார இணைப்பு இல்லை, சொத்துவரி கட்டவில்லை, அந்த இடத்தின் மீது கடன் இருக்கிறது போன்ற விவரங்கள் புவனேஸ்வருக்கு தெரியவந்திருக்'கிறது.
அவசரமாக
புவனேஸ்வர் இதுகுறித்து ராஜமௌலியிடம் கேட்டபோது அதற்கு பதில் சொல்லாத ராஜமௌலி அந்த இடத்தை அவசர அவசரமாக வேறு ஒருவருக்கு விற்பனை செய்துவிட்டார். இதனால் ஆதிரமடைந்த புவனேஸ்வர் தன்னை ஏமாற்றி பணம் பறித்ததாக ஆந்திராவில் உள்ள நாம்பல்லி நீதிமன்றத்தில் ராஜமௌலி மீது வழக்குத் தொடர்ந்தார்.
சம்மன்
இந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராகும்படி நாம்பல்லி நீதிமன்றம் ஏற்கனவே 3 முறை ராஜமலிவுக்கு நோட்டீசு அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராக வில்லை. இதையடுத்து வருகின்ற 24-ந் தேதிக்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி அவருக்கு நீதிமன்றம் நேற்று சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி நாம்பல்லி போலீசார் ராஜமவுலி மீது 2 பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்போது இந்த சம்மன் விவகாரம் டோலிவுட் உலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications