இலங்கையில் மகிந்த ராஜபக்சே மீண்டும் அதிபராக வேண்டும்.. சொல்வது சு.சுவாமி
இலங்கையில் மகிந்த ராஜபக்சே மீண்டும் அதிபராக வேண்டும் என்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.
Recommended Video
டெல்லி: இலங்கையில் மகிந்த ராஜபக்சே மீண்டும் அதிபராக வேண்டும் என பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் சிங்களர் பகுதியில் ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிக இடங்களில் வெற்றி பெற்றது. தமிழர் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் ஆதரித்துள்ளனர்.
ராஜபக்சேவை சிங்களர் மீண்டும் ஆதரித்துள்ளது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தமது டிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
It is good to hear the Rajapaksa is making a strong comeback in Sri Lanka politics. He should become President soon
— Subramanian Swamy (@Swamy39) February 12, 2018
இலங்கை அரசியலில் ராஜபக்சே மீண்டு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ராஜபக்சே விரைவில் இலங்கையின் அதிபராக வேண்டும்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார்.