நிச்சயம் செய்த பெண்ணை தவறாக வீடியோ எடுத்து, நண்பருக்கும் விருந்தாக்க முயன்ற ராணுவ வீரர்!
ஜோத்பூர்: ராஜஸ்தானில் நிச்சயம் செய்ய இருந்த பெண்ணை பாலியல் வன்முறை செய்து, வீடியோ எடுத்து, நண்பருக்கு விருந்தாக்க முயன்ற ராணுவ வீரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராணிதன் சிங். இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறைக்கு இவர் தனது சொந்த கிராமத்திற்கு வந்திருந்த போது திருமண ஏற்பாடு நடைபெற்றது. அவருக்கு ஒரு பெண்ணை பார்த்து பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

ராணிதன் சிங் தனக்கு பார்த்த பெண்ணை அடிக்கடி சென்று பார்த்து பேசி உள்ளார். பின்னர் அந்த பெண்ணுடன் உடல் ரீதியாக உறவு வைத்து உள்ளார். பின்னர் அதை வீடியோவாக எடுத்து அதனை இணையதளங்களில் வெளியிட்டு விடுவதாக பாலியல் வன்முறையில் ஈடுபட்டு உள்ளார்.
பின்னர் அந்த வீடியோவை தனது நண்பருக்கு அனுப்பி வைத்து உள்ளார். பின்னர் தனக்கு பார்த்த பெண்ணை தனது நண்பருக்கு விருந்தாக்க முயன்று உள்ளார்.
இதை தொடர்ந்து அந்த பெண் தனது தந்தையிடம் இந்த விவரத்தை கூறி உள்ளார். இதை தொடர்ந்து ஷேர்கார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications