நாட்டையே உலுக்கிய ரக்பர் கான் கும்பல் படுகொலை.. 4 பசு காவலர்கள் குற்றவாளி! ராஜஸ்தான் கோர்ட் தீர்ப்பு
ஜெய்பூர்: கடந்த 2018 ஆம் ஆண்டு ரக்பர் கான் பசு பாதுகாப்பு கும்பலால் அடுத்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் குற்றவாளிகள் என்று ஆல்வார் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருக்கிறது.
வட இந்தியாவில் உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், குஜராத், உத்தராகண்ட், அரியானா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இஸ்லாமியர்கள் பசு பாதுகாப்பு என்ற பெயரில் மத வெறி கும்பல்களால் அடித்து கொல்லப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. இப்படி ஏராளமானோர் மதம் காரணமாக பலர் வயது வித்தியாசமின்றி கொல்லப்பட்டு உள்ளார்கள்.

இதுபோன்ற கொலைகளில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒன்று ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் அறங்கேறியது. ஆல்வார் மாவட்டம் ராம்கர் பகுதியை அடுத்த லல்வாண்டி பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் தேதி இரவு ரக்பர் கான் (வயது 31), அஸ்லம் கான் (வயது 32) ஆகியோர் பசுக்களை மேய்த்துக்கொண்டு சென்றனர்.
அரியானா மாநிலம் கோல்காவுன் பகுதியை சேர்ந்த அந்த இருவரும் லால்வாண்டியில் இருந்து தங்கள் சொந்த கிராமத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டு அவர்கள் இருவரையும் ஒரு கும்பல் சுற்றி வளைத்து தாக்க முயன்றது.
பசுக்களை மேய்ச்சலுக்காக அழைத்து செல்வதாக இருவரும் பல முறை எடுத்துக்கூறியும் கண்டுகொள்ளாத அந்த கும்பல் இருவரையும் மணிக்கணக்கில் கொடூரமாக தாக்கியது. இதில் தாக்கப்பட்ட அஸ்லம் கான் என்பவர் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், அந்த கும்பலின் பிடியில் சிக்கி கொடூரமாக தாக்கப்பட்டு படுகாயமடைந்த ரக்பர் கான் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த பசுவின் பேரால் நடத்தப்பட்ட இந்த கும்பல் படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கடாரியா, காவல் துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விஜய், நரேஷ், பரம்ஜீத், தர்மேந்திரா, நவால் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆல்வார் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
அதில், கைது செய்யப்பட்ட விஜய், நரேஷ், பரம்ஜீத், தர்மேந்திரா ஆகியோர் ரக்பர் கானை கொன்றதற்கான ஆதாரங்கள் உள்ளதால் அவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியது. நவால் என்பவரை மட்டும் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறை கைது செய்து இருப்பதாக கூறி விடுவித்து உத்தரவிட்டது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications