ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைவது உறுதி! அதுவும் தனிப் பெரும்பான்மையுடன்! கோட்டை விட்ட காங்கிரஸ்!
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், பாஜக 105 தொகுதிகள் முதல் 125 தொகுதிகளை வரை வெற்றி பெற்றி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என பி மார்க் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 69 தொகுதிகள் முதல் அதிகபட்சம் 91 தொகுதிகள் வரை மட்டுமே வெற்றிபெறக் கூடும் என பி மார்க் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பாஜக நூலிழையில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வந்தாலே அதனை விமரிசையாக கொண்டாட காத்திருந்த ராஜஸ்தான் பாஜகவினர், இப்போது தனி மெஜாரிட்டியுடன் தாங்கள் ஆட்சி அமைப்போம் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளதால் போட்றா வெடியை என கொண்டாடித் தீர்க்க ஆரம்பித்துள்ளனர்.
அதே வேளையில் கருத்துக்கணிப்பு முடிவுகளை ராஜஸ்தான் காங்கிரஸார் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதும், மக்கள் தங்கள் பக்கம் தான் எனவும் கூறி வருகின்றனர். இதனிடையே ராஜஸ்தான் மாநில எக்சிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகளை பொறுத்தவரை சொல்லி வைத்தாற்போல் எல்லா முடிவுகளும் பாஜக தான் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன.
இதனால் காங்கிரஸ் கட்சிக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டுமல்ல தேசியளவில் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ராஜஸ்தானின் காங்கிரஸ் அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது என்ற பாஜகவினரின் பிரச்சாரம் ஓரளவு தேர்தல் முடிவுகளிலும் எதிரொலித்திருக்கிறது என்றே சொல்லலாம். பாஜகவின் பிரச்சாரத்திற்கு காங்கிரஸ் உரிய பதிலடி கொடுப்பதை விட்டுவிட்டு கோஷ்டிகாணம் பாடுவதிலேயே நேரத்தை செலவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications