அத்வானியா அடங்கி போறதுக்கு? பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் 'ராஜ மாதா' வசுந்தர ராஜேவின் 'பாகுபலி'கள்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பாஜக வெல்லும் என கருத்து கணிப்புகள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றன. ஆனால் பாஜகவின் வெற்றிக் கனவுக்கு மாஜி முதல்வர் வசுந்தர ராஜேவும் அவரது பரிவாரங்களும் ஆகப் பெரும் வேட்டு வைக்கப் போகிறது என்கின்றன அம்மாநில தகவல்கள்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது அதிருப்தி அலை வீசுவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 5 ஆண்டுகளாக சச்சின் பைலட் உள்ளிட்டோருடன் உட்கட்சி மோதலில் இடைவிடாமல் மோதி வருகிறவர் அசோக் கெலாட். இதனாலேயே ராஜஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை பறிகொடுக்கப் போகிறது காங்கிரஸ் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

பாஜகவுக்கு சாதகம்: ராஜஸ்தானைப் பொறுத்தவரையில் காங்கிரஸ், பாஜக எனும் இருதுருவ அரசியல்தான். இப்போது ஆம் ஆத்மியும் களமிறங்கி இருக்கிறது. இதனால் இயல்பாகவே காங்கிரஸுக்கு எதிரான அதிருப்தி அலை என்பது பாஜகவுக்கு சாதகமாக இருக்கிறது.
அத்வானி முதல் வசுந்தர ராஜே வரை: ஆனால் பாஜகவோ தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போடும் கதையாக செயல்படுகிறது என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து. பாஜகவில் 2014-ம் ஆண்டு மோடி-அமித்ஷா தலையெடுத்த பின்னர் அத்வானி உள்ளிட்ட சீனியர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். இந்த வரிசையில் ஏராளமான பெருந்தலைகள் இருந்த இடம் தெரியாமல் ஓரம்கட்டப்பட்டுவிட்டனர். இவர்கள் பட்டியலில்தான் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியாவையும் டெல்லி பாஜக மேலிடம் சேர்த்துவிட்டது.
ஒதுக்கப்பட்ட வசுந்தர ராஜே சிந்தியா: ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தொடர்பான குழுக்கள் தொடங்கி வேட்பாளர்கள் பட்டியல் வரைக்கும் அத்தனையிலும் வசுந்தர ராஜே சிந்தியாவும் அவரது ஆதரவாளர்களும் ஒதுக்கி வைக்கப்பட்டுவிட்டனர். ராஜஸ்தானில் 7 எம்.பி.க்களையும் வேட்பாளர்களாக பாஜக களமிறக்கி இருக்கிறது. வசுந்தர ராஜே சிந்தியா ஒரு பொருட்டே அல்ல என்பதாகவே பாஜக தலைமை செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மகிழ்மதி ராஜமாதா போல ஆவேசம்: அதேநேரத்தில் இனியும் பொறுத்திருக்க முடியாது; நாம் நமது பலத்தைக் காட்டுவோம் என வசுந்தர ராஜே தரப்பு கோதாவில் குதிக்க முடிவு செய்துவிட்டதாம். அத்வானி போல அடங்கி இருக்க தேவையில்லை.. நிஜத்தில் நான் குவாலியர் மகாராணி- ராஜ மாதா.. எனக்கு எதிராகவா சதி செய்கிறீர்கள்? என்ற ரேஞ்சில் கோபத்துடன் இதுவே என் கட்டளை.. என் சாசனம் என 'மகிழ்மதி' தேசத்து ராஜமாதா போல தமது 'பாகுபலிகளை' அதிகாரப்பூர்வ பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக சுயேட்சைகளாக களமிறக்கப் போகிறாராம். ஆகக் குறைந்தபட்சம் 15 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை எதிர்த்து பாஜக அதிருப்தி வேட்பாளர்களை நிறுத்தப் போகிறாராம் வசுந்தர ராஜே என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
-
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்?












Click it and Unblock the Notifications