ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்- வாக்குப் பதிவு
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. வாக்குப் பதிவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு தொகுதியில் வேட்பாளர் ஒருவர் திடீரென காலமானதால் 199 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்றைய தேர்தலில் மொத்தம் 4.08 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இதில் ஆண்கள் 2.15 கோடி பேர். பெண்கள் 1.93 கோடி பேர்.
மொத்தம் 2087 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். 47,233 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 8-ந் தேதி எண்ணப்படும்.
இன்றைய வாக்குப் பதிவையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications