மறுமணம் செய்து கொண்டவர்கள் 3வது குழந்தை பெற்றுக் கொள்ளலாம் - ராஜஸ்தான் அரசு அனுமதி
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் 2 குழந்தைகள் மட்டும் பெற முடியும் என்ற கட்டுப்பாடு இருந்த நிலையில் தற்போது அரசு ஊழியர்கள் 3 ஆவது குழந்தை பெற்றுக் கொள்ள ராஜஸ்தான் அரசு அனுமதி வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஆனால் இது மறுமணம் செய்து கொள்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

முன்னதாக அரசு ஊழியர்கள் 2 குழந்தைகள் பெறுவது தொடர்பான அரசாணையை கடந்த 2000 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அரசு வெளியிட்டது. அதன்படி 2 குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு அரசு வேலை கிடையாது.
அதேபோல் அரசு வேலை கிடைத்த பிறகு மூன்றாவது குழந்தை பிறந்தால், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளில் கட்டுப்பாடுகள் உண்டு.












Click it and Unblock the Notifications