Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆணவ கொலை சட்டத்திற்கு ஒப்புதல் தர முடியாது! ராஜஸ்தான் அரசுக்கே திருப்பி அனுப்பிய ஆளுநர்! என்ன காரணம்

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலச் சட்டசபை நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களை அம்மாநில ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இந்த 10 மசோதாக்களில் 9 மசோதாக்கள் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டதாகும். அதில் குறிப்பாக ஆணவக் கொலைகளைத் தடுக்கும் மசோதா, கும்பல் வன்முறை தொடர்பான மசோதாக்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

மாநில அரசுகளை நிறைவேற்றும் மசோதாக்களைச் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறது. தமிழகத்திலும் ஆளுநர் இதுபோல மசோதாக்களைத் திருப்பி அனுப்பியிருக்கிறார். இதற்கிடையே ராஜஸ்தான் மாநில ஆளுநர், சட்டப்பூர்வ மற்றும் அரசியலமைப்பு ரீதியான காரணங்களைச் சுட்டிக்காட்டி அம்மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களை மாநில சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்பியுள்ளார்.

Rajasthan Governor Returns 10 Bills Including Anti-Lynching Law by previous Congress Gehlot govt

காங்கிரஸ் அரசின் மசோதாக்கள்

இந்த மசோதாக்களில் ஒன்பது மசோதாக்கள், முந்தைய அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டவை. எஞ்சிய ஒரு மசோதா, முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவின் 2008 ஆட்சிக் காலத்தைச் சேர்ந்ததாகும். இந்த விவரங்கள் புதன்கிழமை அன்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டன.

சட்டம் சொல்வது என்ன

அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி, மாநில அரசு நிறைவேற்றும் சட்ட மசோதாவானது ஏற்கனவே உள்ள மத்தியச் சட்டங்களுக்கு முரணாக இருப்பதாகக் கண்டறியப்பட்டால், ஆளுநரால் அதைத் திருப்பி அனுப்ப முடியும். மாநிலப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் மட்டுமே மாநில அரசுகளுக்குச் சட்டம் இயற்றும் அதிகாரம் உண்டு. பொதுப் பட்டியலில், மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டம் இயற்றலாம். இருப்பினும், சட்டங்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்படும் சமயத்தில், மத்திய அரசின் சட்டம் மேலோங்கும்; மாநிலச் சட்டங்கள் அதை மீற முடியாது.

இதேபோன்ற ஒரு நிலை முன்பு வசுந்தரா ராஜேவின் ஆட்சிக்காலத்திலும் ஏற்பட்டது. அப்போதைய ஆளுநர் பிரதிபா பாட்டிலால் மத சுதந்திர மசோதா திருப்பி அனுப்பப்பட்டது. அந்த மசோதா பின்னர் மறுசீரமைக்கப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், பல ஆண்டுகளாக அது நிலுவையிலேயே இருந்து வருகிறது.

ஆணவக் கொலைகள்

சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட தகவல்களின்படி, 2019ஆம் ஆண்டு ஆணவக் கொலைகள் தொடர்பான மசோதாவைத் திருப்பி அனுப்பும்போது, ஆளுநர் சில முக்கிய சட்டச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டினார். இந்த மசோதா இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) 1860 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) 1973 ஆகியவற்றைக் குறிப்பிட்டது. ஆனால், இந்த பழைய சட்டங்கள் தற்போது மாற்றப்பட்டுவிட்டன. புதிய பாரதிய நியாய சம்ஹிதா, 2023-ன் பிரிவு 103, ஆணவக் கொலைக் குற்றங்களைத் தீர்ப்பதற்கான போதுமான விதிகளைக் கொண்டுள்ளது என ஆளுநர் குறிப்பிட்டார். இதுவே இந்த மசோதாவை ஆளுநர் திரும்ப அனுப்ப முக்கிய காரணமாக அமைந்தது.

சமூக நீதி மசோதாக்கள்

முந்தைய கெலாட் அரசின் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பி இருக்கிறார். அதில் கும்பல் வன்முறைக்கு எதிராக 2019ல் நிறைவேற்றப்பட்ட பாதுகாப்பு மசோதா மற்றும் கௌரவம், பாரம்பரியம் என்ற பெயரில் திருமண உறவுகளில் தலையிடுவதைத் தடுக்கும் ராஜஸ்தான் மசோதா 2019 ஆகியவை அடங்கும். இவை சமூக நீதி தொடர்பான முக்கிய மசோதாக்களாகும்.

மேலும், 2020 நவம்பரில் நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாயம் தொடர்பான திருத்த மசோதாக்கள், 2022இல் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு தனியார் பல்கலைக்கழக மசோதாக்கள் மற்றும் 2023 ஆகஸ்டில் நிறைவேற்றப்பட்ட ராஜஸ்தான் மின்சார (கட்டண) மசோதா 2023, நாதத்வாரா கோயில் (திருத்த) மசோதா 2023 ஆகியவையும் ஆளுநரால் மறுபரிசீலனை செய்யத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+