ராஜஸ்தானில் மீண்டும் கும்பல் வன்முறை.. அடித்தே கொல்லப்பட்ட போலீஸ்காரர்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மீண்டும் கும்பல் வன்முறை தலை தூக்கி உள்ளது. அங்கு தலைமை காவலர் ஒருவர் ஒரு கும்பலால் அடித்தே கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ரஸ்மன்ந்த மாவட்டம் குன்வாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் கனி வயது 48. இவர் அங்குள்ள ஒரு காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.

நிலத்தகராறு தொடர்பாக சிலரிடம் அவர் விசாரித்து கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஒரு கும்பல் தலைமைக் காவலர் அப்துல் கனியை தாக்க தொடங்கியது. மிக கொடூரமாக அந்த கும்பல் காவலர் அப்துல் கனியை அடித்து உதைத்ததில் அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்தவிட்டதாக அறிவித்தனர்.
இதையடுத்து சம்பவம் குறித்து அறிந்த உயர்அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வன்முறை கும்பல் விரைவில் கைது செய்யப்படுவார்கள் உயர் காவல் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ராஜஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக வன்முறை கும்பல் தாக்குதல் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ரக்பர் கான் வயது 28. இவர் பசுக்களை கடத்தி செல்வதாக கூறி கொடூரமாக தாக்கியது. இதையடுத்து போலீசார் தங்கள் கஸ்டடியில் கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார். இதேபோல் கடந்த 2017ம் ஆண்டு மாடுகளை ஜெய்பூரில் இருந்து ஹரியானா கொண்டு சென்ற பெக்லு கான் என்பவர் மாடுகளை கடத்தி செல்வதாக இடைமறித்து தாக்கி பசு பாதுகாப்பு கும்பல் படுகொலை செய்திருந்தது.
இப்போது மூன்றாவது போலீஸ்கார் அப்துல் கனி நிலத்தகராறை விசாரிக்கும் போது கும்பலலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications