ராஜஸ்தானில் மீண்டும் கும்பல் வன்முறை.. அடித்தே கொல்லப்பட்ட போலீஸ்காரர்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மீண்டும் கும்பல் வன்முறை தலை தூக்கி உள்ளது. அங்கு தலைமை காவலர் ஒருவர் ஒரு கும்பலால் அடித்தே கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ரஸ்மன்ந்த மாவட்டம் குன்வாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் கனி வயது 48. இவர் அங்குள்ள ஒரு காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.

நிலத்தகராறு தொடர்பாக சிலரிடம் அவர் விசாரித்து கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஒரு கும்பல் தலைமைக் காவலர் அப்துல் கனியை தாக்க தொடங்கியது. மிக கொடூரமாக அந்த கும்பல் காவலர் அப்துல் கனியை அடித்து உதைத்ததில் அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்தவிட்டதாக அறிவித்தனர்.
இதையடுத்து சம்பவம் குறித்து அறிந்த உயர்அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வன்முறை கும்பல் விரைவில் கைது செய்யப்படுவார்கள் உயர் காவல் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ராஜஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக வன்முறை கும்பல் தாக்குதல் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ரக்பர் கான் வயது 28. இவர் பசுக்களை கடத்தி செல்வதாக கூறி கொடூரமாக தாக்கியது. இதையடுத்து போலீசார் தங்கள் கஸ்டடியில் கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார். இதேபோல் கடந்த 2017ம் ஆண்டு மாடுகளை ஜெய்பூரில் இருந்து ஹரியானா கொண்டு சென்ற பெக்லு கான் என்பவர் மாடுகளை கடத்தி செல்வதாக இடைமறித்து தாக்கி பசு பாதுகாப்பு கும்பல் படுகொலை செய்திருந்தது.
இப்போது மூன்றாவது போலீஸ்கார் அப்துல் கனி நிலத்தகராறை விசாரிக்கும் போது கும்பலலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications