தந்தை ராஜேஷ் பைலட் நினைவு நாள்.. சச்சின் பைலட் கட்சி தொடங்கிடுவாரோ? பதற்றத்தில் கண்காணிக்கும் காங்.!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அதிருப்தியில் இருக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் புதிய கட்சி தொடங்கிவிடுவாரோ? என்ற பதற்றத்தில் காங்கிரஸ் கட்சி இன்று அவரை தீவிரமாக கண்காணித்து கொண்டிருக்கிறது.
ராஜஸ்தான் சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையேயான மோதல் அதி உச்சத்தை எட்டியிருக்கிறது. இருவருக்கும் இடையேயான இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர டெல்லி மேலிடம் தீவிரம் காட்டியது. இருவரையுமே டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது இருவரும் இணைந்தே தேர்தலை சந்திப்போம்; கர்நாடகா பாணியில் வெல்வோம் என்றெல்லாம் சூளுரைத்தனர். இந்தப் பேச்சுவார்த்தையில் ராகுல் காந்தியும் உடன் இருந்தார்.

ஆனால் இந்த அமைதி ஒப்பந்தமானது சில நாட்கள்தான் நீடித்தது. பின்னர் திடீரென ஜூன் 11-ந் தேதி சச்சின் பைலட் தனி கட்சி தொடங்கப் போகிறார்; ஜூன் 11-ந் தேதி சச்சின் பைலட் தந்தை ராஜேஷ் பைலட் நினைவுதினம். ஒவ்வொரு மாதமும் 11-ந் தேதி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வரும் சச்சின் பைலட் இம்முறை தனிக்கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்றன அந்த செய்திகள்.
இந்த செய்திகள் காங்கிரஸ் கட்சியை நிலைகுலைய செய்தது. கர்நாடகா பாணியில் ராஜஸ்தானில் வெல்லலாம் என கனவு கண்ட காங்கிரஸ் மேலிடத்துக்கு இது பேரிடியாக இருந்தது. இதனால் உடனடியாக இந்த தகவல் வதந்தி இதனை யாருமே நம்பாதீங்க என்றெல்லாம் காங்கிரஸ் மன்றாடிப் பார்த்தது. ஆனால் இப்போதுவரைக்கும் சச்சின் பைலட் வாயே திறக்கவில்லை
#WATCH | Dausa, Rajasthan: Congress leader Sachin Pilot pays tribute to his father Rajesh Pilot on his death anniversary pic.twitter.com/c1xmqs0Nxs
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) June 11, 2023
இந்நிலையில் இன்று தந்தையின் நினைவு தினத்தை முட்டி அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார் சச்சின் பைலட். இருப்பினும் புதிய கட்சி தொடர்பாக எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. சச்சின் பைலட் புதிய தொடங்குவாரா? இல்லையா? என அவரது ஒவ்வொரு நகர்வையும் காங்கிரஸ் மேலிடம் மிக உன்னிப்பாக கண்காணித்து வருகிறதாம்.
-
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications