பசு மாடு மீது மோதிய வந்தே பாரத் ரயில்.. தண்டவாளம் அருகே சிறுநீர் கழிக்க சென்றவர் உயிரிழந்த சோகம்
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் தண்டவாளத்தில் நின்ற மாடு மீது வந்தே பாரத் ரயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாடு விழுந்து தண்டவாளம் அருகே சிறுநீர் கழித்துக் கொண்டு இருந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தியாவில் அதி நவீன வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. மணிக்கு 160 கி.மீட்டர் வேகம் வரை செல்லும் திறன் கொண்டவை இந்த வந்தே பாரத் ரயில்கள்.
இருந்தாலும் இந்தியாவில் உள்ள ரயில் வழித்தடங்களில் உள்ள சிக்கல்கள் மற்றும் கட்டமைப்புகள் காரணமாக அந்த வேகத்தில் இந்த ரயில்கள் இயக்கப்படுவது இல்லை. அதிகபட்சமாக 130 கி.மீட்டர் வேகம் வரை இயக்கப்படுகின்றன.

வந்தே பாரத் ரயில்கள் மீது கல் வீசப்படும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து கொண்டு இருக்கின்றன. இது ஒருபக்கம் என்றால் வழித்தடங்களில் மாடு மீது மோதி வந்தே பாரத் ரயில் விபத்தில் சிக்கும் நிகழ்வுகளும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. மும்பை - காந்திநகர் வழித்தடத்தில் நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது.
இந்த ரயில் சேவை தொடங்கிய சில நாட்களிலேயே மாடு மீது மோதி விபத்துக்குள்ளானது. இப்படி வந்தே பாரத் ரயில்கள் அடிக்கடி மாடு மீது மோதும் விபத்துக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் வந்தே பாரத் ரயில்களும் சேதம் அடைவதோடு, கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவமும் நடைபெறுகிறது. இதனால், ரயில்வே தண்டவாளங்களை ஒட்டி வேலிகள் அமைக்கவும் மேற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இத்தகைய சூழலில், ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வார் பகுதியில், மாடு மீது வந்தே பாரத் ரயில் மோதியது. ரயில் மோதிய வேகத்தில் மாடு தூக்கி வீசப்பட்டது தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்த நபர் மீது விழுந்துள்ளது. இதில் அந்த நபரும் உயிரிழந்து உள்ளார். இது குறித்த விவரம் வருமாறு: -

ராஜஸ்தானின் அல்வார் அருகே காலி மோரி கேட் பகுதி அருகே இன்று காலை 8.30 மணியளவில் வந்தே பாரத் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தின் குறுக்கே வந்த மாடு மீது வந்தே பாரத் ரயில் மோதியது. ரயில் மோதிய வேகத்தில் சுமார் 30 அடி தூரம் மாடு தூக்கி வீசப்பட்டுள்ளது. அப்போது தண்டவாளம் அருகே சிறுநீர் கழித்துக் கொண்டு இருந்த ஷிவ்தயாள் என்பவர் மீது மாடு விழுந்தது.
இதில் படுகாயம் அடைந்த ஷிவ்தயாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே போலீசர் ஷிவ்டியால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தண்டவாளம் அருகே சிறுநீர் கழிக்க சென்ற போது, ரயில் மோதியதால் தூக்கி வீசப்பட்ட மாடு விழுந்து ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. .
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications