அக்பர் ஒரு 'ரேபிஸ்ட்'! அவரது பெயரை பயன்படுத்துவதே பாவமாம்.. ராஜஸ்தான் பாஜக அமைச்சர் சரமாரி விமர்சனம்
ஜெய்ப்பூர்: அக்பர் ஒரு பாலியல் வன்கொடுமையாளர் என்று ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளும் பாஜக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விமர்சித்திருக்கிறார். இவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் சிங்கங்களுக்கு அக்பர், சீதா என பெயர் வைக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்திருந்தது. இந்த சம்பவத்தில் முதன்மை தலைமை வனக்காவலரை திரிபுரா அரசு பணி இடைநீக்கமும் செய்திருந்தது. இந்நிலையில், இதனை தொடர்ந்து தற்போது மற்றொரு சர்ச்சை அக்பர் பெயரில் வெடித்திருக்கிறது. அதாவது, அக்பர் ஒரு பாலியல் வன்கொடுமையாளர் என்றும், அவர் பெயர் இந்தியாவில் பயன்படுத்துவதே பாவம் என்று ராஜஸ்தான் மாநிலத்தின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

சமீபத்தில் அம்மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இந்நிலையில், தற்போது பள்ளி கல்வித்துறையானது பாடபுத்தகங்களில் சில மாற்றங்களை செய்து வருகிறது. இது குறித்து தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த கல்வித்துறை அமைச்சர் மதன் திலாவர், அக்பரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் பேசியதாவது, “நாங்கள் பள்ளியில் படிக்கும் போது, அக்பர் சிறந்தவர் என்று படித்தோம். நானும் அதையே படித்திருக்கிறேன், ஆனால் அவர் மீனா பஜார் அமைத்து அழகான பெண்களையும், சிறுமகளையும் கூட்டிச் சென்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்வதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். பாலியல் வன்கொடுமை செய்பவர் எப்படி சிறந்தவராக, உயர்ந்தவராக இருக்க முடியும்? அக்பரின் பெயரை இந்தியாவில் பயன்படுத்துவதே பாவம். அவர் ஒரு படையெடுப்பாளர். அவருக்கும் இந்திய மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று கூறியுள்ளார்.
இதுபோன்ற சர்ச்சைகளை மதன் திலாவர் எழுப்புவது இது முதல்முறையல்ல. ஏற்கெனவே, இந்து மாணவிகளை மதம் மாற்றியதாக கூறி ஆசிரியர்கள் இருவரை இவர் சஸ்பெண்ட் செய்திருக்கிறார். ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளியில் மத மாற்றமும், லவ் ஜிகாத்தும் நடக்கிறது என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் தற்போது அக்பர் குறித்து குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார்.
இவரது கருத்துக்களுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தொடர்ச்சியாக முகலாய மன்னர்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் முன்வைக்கப்படுவது விவாதங்களை கிளப்பியுள்ளது.
-
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications