ராஜீவுக்கு ஒரு எஸ்ஐ கூட பாதுகாப்புக்காக நியமிக்கப்படவில்லை- அமைச்சர் ஆர்.பி.என். சிங்
டெல்லி: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் மோடிக்கு கூடுதல் பாதுகாப்பு கோருகிறது பாஜக. ஆனால் முன்னாள் பிரதமரான ராஜீவ்காந்திக்கு போதுமான பாதுகாப்பு கொடுக்கப்படாததால் அவரது உயிரே பறிபோனது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், மோடிக்கு போதுமான பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு பாஜக ஆதரவுடனான மத்திய அரசு எப்படியான பாதுகாப்பு கொடுத்தது?

சப் இன்ஸ்பெக்டர் நிலையிலான போலீஸ் பாதுகாப்பு கூட கொடுக்கவில்லையே.. அதனால் அவரது உயிரே பறிக்கப்பட்டது. ஆனால் நரேந்திர மோடிக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்று பாஜகவுக்கு உறுதி அளிக்கிறேன் என்றார்.
1991ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடனான மத்திய அரசு ஆட்சியில் இருந்தது. அப்போதுதான் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார். இதையே ஆர்.பி.என்.சிங் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications