ஒரு உள்துறை அமைச்சர் பேசுகிற பேச்சா இது...!
அங்ரெய்ல், மேற்கு வங்கம்: வங்கதேசத்துக்குள் மாடுகள் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்துங்கள். அவர்கள் மாட்டுக் கறி கிடைக்காமல் கஷ்டப்படட்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.
இப்படியெல்லாமா ஒரு உள்துறை அமைச்சர் பேசுவார் என்று கேட்கும்படியாக அமைந்திருக்கிறது ராஜ்நாத் சிங்கின் பேச்சு.
தேசிய அளவில் பசு வதையை அமல்படுத்த வேண்டும் என்று பேசி வருகிறார் ராஜ்நாத் சிங். இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் அங்ரெய்ல் என்ற இடத்தில் அவர் வங்கதேசத்திற்குள் மாடுகள் கடத்தப்படுவதை எல்லைப் பாதுகாப்புப் படையினர் தடுக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
எல்லைப் பாதுகாப்பு படையினர் மத்தியில் பேசுகையில் இவ்வாறு பேசினார் ராஜ்நாத் சிங். இதனால் வங்கதேசத்தினருக்கு மாட்டுக் கறி கிடைக்காத நிலை ஏற்படும் என்பது ராஜ்நாத் சிங்கின் கருத்தாகும்.

ஒரு மாடு கூட போகக் கூடாது
இதுகுறித்து ராஜ்நாத் சிங் பேசுகையில், வங்கதேசத்திற்குள் ஒரு மாடு கூட போகக் கூடாது. இதை இந்திய, வங்கதேச எல்லையில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்புப் படையினர் உறுதி செய்ய வேண்டும்.

மாட்டுக் கறிக்குப் பஞ்சம் வரட்டும்
இதனால் வங்கதேசத்தில் மாட்டுக் கறி கிடைக்காத நிலை ஏற்படும். அதற்கு பஞ்சம் ஏற்படும். இதன் மூலம் நமது மாடுகளும், பசுக்களும் காக்கப்படும்.

விலை உயர்ந்து விட்டது
எல்லைப் பாதுகாப்புப் படையினர் தற்போது தீவிரமாகக் கண்காணித்து வருவதால் மாடுகள் கடத்தப்படுவது வெகுவாக குறைந்துள்ளது. இதனால் வங்கதேசத்தில் 30 சதவீத அளவுக்கு மாட்டுக் கறி விலை உயர்ந்துள்ளதாகவும் அறிகிறேன்.

மேலும் கிடுக்கிப்பிடி பிடியுங்கள்
இந்த விழிப்புணர்வை பாதுகாப்புப் படையினர் மேலும் அதிகரிக்க வேண்டும். ஒரு மாடு கூட போகக் கூடாது. அப்போதுதான் 80 சதவீத அளவுக்கு விலை உயரும். வங்கதேச மக்களும் மாட்டுக் கறி சாப்பிடுவதை நிறுத்துவார்கள் என்றார் அவர்.

17 லட்சம் கால்நடைகள்
இந்தியாவிலிருந்து கடந்த ஆண்டு 17 லட்சம் கால்நடைகள் வங்கதேசத்திற்குள் கடத்தப்பட்டதாக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications