மாவோயிஸ்டுகளை ஒடுக்க 10 மாநில அதிகாரிகளுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மாவோயிஸ்டுகள் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கடுமையாக எச்சரித்துள்ளார்.

மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார். மொத்தம் 10 மாநில அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Rajnath Singh presides over meeting to chalk out strategies to fight Maoists

இந்த கூட்டத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுப்போம் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விவரித்தார். மேலும் மாவோயிஸ்டுகளுடன் அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபடாது. அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கான விஷயங்களில் கவனம் செலுத்தப்படும்,

மாவோயிஸ்டுகள் தாக்குதலில் ஈடுபட்டால்,பாதுகாப்பு படையினர் கடுமையான பதில் தாக்குதல் நடத்துவர். மாவோயிஸ்டுகளை எதிர்த்து போரிடும் வீரர்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்கும் என்றும் ராஜ்நாத்சிங் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+