ஓகி புயல் பாதிப்பு.. தேசிய பேரிடர் மீட்பு படை தலைவருடன் ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை
டெல்லி: ஓகி புயல் பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தேசிய பேரிடர் மீட்பு படை டி.ஜி.யிடம் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையின்போது, தேவைப்படும் பகுதிகளுக்கு நிவாரண குழுக்களை அனுப்ப உத்தரவிட்டார் ராஜ்நாத்சிங். ஏற்கனவே தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர்கள் பாதிக்கப்பட்ட இடத்திற்கு விரைந்துள்ளதாகவும், அவசர உதவிக்கு தேவைப்படும் வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளாார்.
இதனிடையே டெல்லியில் இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகளும் இன்று அவசர ஆலோசனையை நடத்தினர்.
HM Shri @rajnathsingh spoke to DG NDRF and reviewed the situation in the areas affected by cyclone Ockhi. The NDRF teams have already been moved to the affected areas. More teams are on standby to respond to any further emergencies. MHA is also closely monitoring the situation.
— HMO India (@HMOIndia) December 1, 2017