ராஜ்யசபா தேர்தல்: ப.சிதம்பரம், ராம்ஜெத்மலானி, அம்பிகாசோனி போட்டியின்றி தேர்வு
டெல்லி : ராஜ்யசபாவிற்கு காங்கிரஸ் சார்பில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து போட்டியிட்ட ப.சிதம்பரம், பஞ்சாபில் இருந்து போட்டியிட்ட அம்பிகா சோனி, பிகார் மாநிலத்தில் இருந்து போட்டியிட்ட ராம்ஜெத்மலானி, மிசா பாரதி ஆகியோர் போட்டியின்று தேர்வாகியுள்ளனர்.
தமிழகம், ஆந்திரம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 57 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிகாலம் விரைவில் காலியாக உள்ளது. இதையடுத்து அந்த பதவிகளுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 11ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அனைத்து மாநிலங்களிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான நேற்று, எதிர்ப்பு வேட்பாளர்கள் இல்லாத பெரும்பாலான மாநிலங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 6 பேர்
தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திங்கம், நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோரும், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரும் போட்டியின்றி தேர்வாகினர். இதனை சட்டப்பேரவைச் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஜமாலுதீன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
ப.சிதம்பரம்
மகாராஷ்டிராவில் 6 இடங்களுக்கு 6 பேர் மட்டுமே போட்டியிட்டனர். பா.ஜ.க.வைச் சேர்ந்த பியூஷ் கோயல், வினய் சகஸ்ரபுத்தே, விகாஸ் மகாத்மே ஆகியோரும், சிவசேனா தரப்பில் சஞ்சய் ராவுத் எம்.பி.யும், காங்கிரஸ் தரப்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் பிரபுல் பட்டேலும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பிரபுல் பட்டேல்
வேட்புமனுவை திரும்பப் பெற நேற்று கடைசி நாள். வேறு யாரும் போட்டியிடாததால், ப.சிதம்பரம், பியூஷ்கோயல் பிரபுல் படேல் (தேசியவாத காங்கிரஸ்), பாஜகவின் வினய் சகஸ்ரபுத்தே, விகாஸ் மகாத்மே, சஞ்சய் ராவத் (சிவசேனா) ஆகியோரும் ராஜ்யசபா எம்.பிக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ராம்ஜெத்மலானி - மிசா பாரதி
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் முன்னாள் தலைவர் சரத் யாதவ், ஆர்.சி.சிங், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் அக்கட்சியின் தலைவரான லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதி, மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மற்றும் பாஜக சார்பில் மூத்த தலைவர் கோபால் நாராயண் சிங் ஆகியோர் போட்டியின்றி ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அம்பிகா சோனி
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மூத்த காங்கிரஸ் தலைவர் அம்பிகா சோனி, ஆளும் ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் பல்விந்தர் சிங் பந்தர் ஆகியோரும் இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications