For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் ஏன் 'அந்த' மோடியை சந்தித்தேன்?: மகாராஷ்டிரா அரசிடம் விளக்கம் அளித்த மும்பை போலீஸ் கமிஷனர்

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியை லண்டனில் சந்தித்து பேசியது குறித்து மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா மகாராஷ்டிரா அரசிடம் எழுத்துப்பூர்வமான விளக்கத்தை சமர்பித்துள்ளார்.

Rakesh Maria submits report on his meeting with Lalit Modi to Maharashtra govt

மோசடி புகாரில் சிக்கி நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் வசித்து வரும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியை கடந்த ஆண்டு லண்டனில் சந்தித்து பேசியதாக மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா தெரிவித்தார். இதையடுத்து இது குறித்து அவரிடம் மகாராஷ்டிரா மாநில அரசு விளக்கம் கேட்டிருந்தது. இந்நிலையில் மரியா லலித் மோடியை சந்தித்தது குறித்து எழுத்துப்பூர்வ விளக்கத்தை அரசிடம் சமர்பித்துள்ளார். இதை கூடுதல் தலைமை செயலாளர் கே.பி. பக்ஷி உறுதிபடுத்தியுள்ளார். ஆனால் மரியா விளக்க கடிதத்தில் என்ன குறிப்பிட்டுள்ளார் என்பதை பக்ஷி தெரிவிக்கவில்லை.

மாநில உள்துறை அமைச்சர் ரஞ்சித் பாட்டில் கூறுகையில்,

லலித் மோடி அடிக்கடி அழைப்பு விடுத்தார் என்பதற்காக மரியா லண்டன் சென்று அவரை சந்தித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. மோடியை சந்தித்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.

English summary
Mumbai Police Commissioner Rakesh Maria submitted a report containing information on his meeting with the former IPL boss Lalit Modi to Maharashtra government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X