பா.ஜனதாவில் இருந்து நீக்குவதா?: ரூ.50 லட்சம் நஷ்டஈடு கேட்கும் ராம் ஜெத்மலானி

பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி. பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.
நிதின் கட்காரி தலைவராக இருந்தபோது அவரது நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அப்போது கட்காரி பதவி விலக வேண்டும் என்று ஜெத்மலானி வலியுறுத்தினார். இதேபோல சி.பி.ஐ. இயக்குனர் நியமனத்துக்கு பா.ஜனதா மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தபோது அவர்களை ஜெத்மலானி கண்டித்தார்.
இதன் காரணமாக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர் பின்னர் நீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது..
கட்சிக்கு எதிராக நடந்து கொண்டதாக ராம் ஜெத்மலானி கடந்த மே மாதம் 28-ந்தேதி அக்கட்சியில் இருந்து 6 ஆண்டுக்கு நீக்கியது. பாஜகவின் பார்லிமென்ட் குழு இந்த நடவடிக்கையை எடுத்தது.
இந்த நிலையில் கட்சியில் இருந்து தன்னை நீக்கியதற்கு ரூ.50 லட்சம் கேட்டு ராம் ஜெத்மலானி டெல்லி ஹைகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
பாரதீய ஜனதா பார்லிமென்ட் குழு மீது அவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
ராம் ஜெத்மலானி தொடர்ந்த இந்த வழக்கு வரும் 28-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications