பாபர் மசூதி இடிப்பு வழக்கு: பாஜக சதி வலையில் சிக்காதீர்கள்- உச்சநீதிமன்றத்தை எச்சரித்த வழக்கறிஞர்கள்
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக சதி வலையில் உச்சநீதிமன்றம் சிக்க கூடாது என மூத்த வழக்கறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.
Recommended Video

டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கை அவசர கதியில் நடத்தி முடிக்க துடிக்கும் பாஜகவின் சதி வலையில் சிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தை மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் உள்ளிட்டோர் எச்சரித்துள்ளனர்.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விசாரணையின் போது முஸ்லிம் அமைப்புகள் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் கபில்சிபல், துஷ்யந்த் தவே, ராஜீவ் தவாண் ஆகியோர் ஆஜராகினர்.

இந்த விசாரணையில் பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் சுட்டிக்காட்டிய மூத்த வழக்கறிஞர்கள், இவ்வழக்குக்கு சம்பந்தமே இல்லாத ஒருவர் விசாரணையை விரைவாக நடத்த வேண்டும் என முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அவரது சதிவலையில் நீதிமன்றம் சிக்கிவிடக் கூடாது என ஒருசேர வலியுறுத்தினர்.
மேலும், 2014 லோக்சபா தேர்தலின் போது அயோத்தி விவகாரத்தைதான் பாஜக தமது தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சமாக முன்னிறுத்தியது. அதற்கு உதவும் வகையில் நீதிமன்ற நடவடிக்கைகள் அமைந்துவிடக் கூடாது என்றார் கபில்சிபல்.
இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டிய தேவை இல்லை; இதை குறைந்தது 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க வேண்டும். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு பின்னர் இவ்வழக்கின் விசாரணையை வைத்துக் கொள்ளலாம் என்றும் சுட்டிக்காட்டினார் கபில் சிபல்.
இருப்பினும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு இவ்வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது,
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications