ராமநவமி துயரம்: ம.பி. கோவில் கிணறு தடுப்பு இடிந்து விழுந்து 13 பேர் பலி- ஆட்சியர் இளையராஜா தகவல்
இந்தூர்: ராமநவமி நாளில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கோவில் கிணறு தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் 13 பேர் பலியாகி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
வட இந்தியாவில் இன்று ராமநவமி கொண்டாட்டங்கள் களைகட்டின. இதன் ஒரு பகுதியாக கோவில்களில் கூட்டம் அலை மோதியது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கோவில் ஒன்றில் பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் கூடினர். அப்போது கோவில் கிணறின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் 30க்கும் மேற்பட்டோர் சிக்கி கொண்டனர். இதையடுத்து உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்தூர் மாவட்ட ஆட்சியர் இளையராஜா ஐ.ஏ.எஸ். தலைமையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கிணற்றுக்குள் தவறி விழுந்தவர்கள் பலர் அடுத்தடுத்து மீட்கப்பட்டனர். 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இருப்பினும் இந்த விபத்தில் சிக்கி 13 பேர் பலியாகினர்.

இந்தூரில் சம்பவம் நடைபெற்ற கோவில் பகுதியில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் முகாமிட்டு மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு வருகின்றனர். முதலமைச்சர் அலுவலகம் தொடர்ந்து தொடர்பு கொண்டு நிலவரங்களை கேட்டு வருகிறது. ராமநவமி நாளில் கோவில் விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications