நீதிமன்ற தீர்ப்பையடுத்து கைதானார் ராம் ரஹிம்.. கட்டுப்பாட்டில் எடுத்தது ராணுவம்

Subscribe to Oneindia Tamil

சண்டீகர்: பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றத்தால் பாலியல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள தேரா சச்சா அமைப்பின் சாமியார் ராம் ரஹிம், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார்.

தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும், கோர்ட்டுக்கு உள்ளே வைத்து ராம் ரஹிமுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதையடுத்து, ராணுவ கட்டுப்பாட்டில் ராம் ரஹிம் கொண்டுவரப்பட்டு கைது செய்யப்பட்டார்.

Ram Rahim Singh to be taken to Chandi Mandir military station

கோர்ட்டிலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்திலுள்ள சந்திர்மந்திர் ராணுவ மையத்தில் ராம் ரஹிம் காவலில் வைக்கப்படுகிறார். சிறையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது உறுதியான பிறகு சிறைக்கு அனுப்பப்படுவார்.

தீர்ப்பையடுத்து ஹரியானாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இணையதள சேவையும் இம்மாநிலத்தில் தடை செய்யப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்கில் ராணுவம் குற்றவாளிகளை கட்டுப்பாட்டில் எடுப்பது வழக்கமில்லை என்றபோதிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக இதில் ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+