அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும்: உ.பி. ஆளுநரின் சர்ச்சை பேச்சு
Subscribe to Oneindia Tamil
லக்னோ: அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்பது கோடான கோடி இந்தியர்களின் விருப்பம் என்று உத்தரபிரதேச ஆளுநர் ராம் நாயக் பேசி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அயோத்தியில் உள்ள பல்கலைகழகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி ராம்நாயக் பேசியதாவது:

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது இந்தியாவில் உள்ள கோடான கோடி மக்களின் கனவு ஆகும். அந்த ஆசை விரைவில் நிறைவேற வேண்டும்.
அதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடி ராம் ஜென்ம பூமி பிரச்சனையை கவனம் செலுத்த வேண்டும்
இவ்வாறு உத்தரபிரதேச ஆளுநர் ராம் நாயக் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications