காஷ்மீர் ராம்பன் பகுதி குடிசைகளில் திடீர் தீவிபத்து... 10 பேர் பலி
ஸ்ரீநகர்: காஷ்மீரில் உள்ள ராம்பன் பகுதியில் குடிசைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
காஷ்மீரின் ராம்பன் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அருகிலேயே குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு இந்தக் குடிசைகளில் திடீரென தீப்பிடித்தது. இதில் 10 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 5 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த தொழிலாளர்கள் சுரங்கப்பாதை அமைப்பதற்காக பஞ்சாபில் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications