விரைவில் அயோத்தியில் 'ராம்லீலா'... உ.பி.முதல்வர் யோகி உத்தரவு
சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட ராம்லீலா நிகழ்ச்சி அயோத்தியில் மீண்டும் நடத்தப்படும் என்று உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
லக்னோ: ராம்லீலா நிகழ்ச்சியை மீண்டும் நடத்த உத்தரப்பிரதேச அரசு தீவிரமாக ஏற்பாடுகளை செய்துவருகிறது. வரும் தசரா பண்டிகையின்போது அயோத்தியில் ராம்லீலா நடத்தப்படும் என்று உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
அதே போல் மதுராவில் ராஸலீலா நிகழ்ச்சியும், பஜனைகளும், கூத்து உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து உ.பி.மாநில இந்துசமய அறநிலையத்துறை செய்திக் குறிப்பும் வெளியிட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கோயில்கள் அனைத்திற்கும் நான்கு வழிச்சாலைகள் அமைத்து, தரமான சாலைப் போக்குவரத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை இப்போதைய பாஜக அரசு செய்துவருகிறது.மேலும் டிஜிட்டல் பில்லிங் முறையும் ஆன்லைன் மூலம் பூஜைகள் செய்யவும் காசி போன்ற புனிதத் தலங்களுக்கு சென்று வரும் பக்தர்களுக்கு ஆன்லைன் வசதியும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்கிறது உபி அரசு.