உ.பி.: 10ம் வகுப்பு மாணவியின் நிர்வாண போட்டோக்களை ஃபேஸ்புக்கில் போட்ட கான்ஸ்டபிள்
ராம்பூர்: உத்தர பிரதேசத்தில் போலீஸ்காரர் ஒருவர் தனக்கு தெரிந்த 10ம் வகுப்பு மாணவியின் நிர்வாண புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் மூண்டா பாண்டே பகுதியைச் சேர்ந்தவர் அராய்சீன். ராம்பூரில் போலீஸ் கான்ஸ்டபிளாக உள்ளார். அவர் தனக்கு தெரிந்த 10ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை திருமணம் செய்து கொள்ள அவரது பெற்றோரிடம் கேட்டார். ஆனால் சிறுமியின் பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அராய்சீன் தனது நண்பர்கள் ஹஷிம், வாசீம் மற்றும் ஜம்ஷெத் ஆகியோருடன் சேர்ந்து சிறுமியின் நிர்வாண புகைப்படங்களை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
மேலும் சிறுமியை தனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறு அவரின் பெற்றோரை துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளார். இதையடுத்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார்.
உள்ளூர் போலீசார் அவரது புகாரை கண்டுகொள்ளாதால் அவர் ராம்பூர் எஸ்.பி.யிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து அராய்சீன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அராய்சீன் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications