குழந்தைகளுக்கு சற்றும் பாதுகாப்பே இல்லாத ம.பி., உ.பி....பலாத்காரம், கொலையில் முதலிடத்தில் ம.பி.!
போபால்: 2013ம் ஆண்டில் நாட்டிலேயே மத்திய பிரதேசத்தில் தான் அதிக அளவில் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
2013ம் ஆண்டில் எத்தனை குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர், எத்தனை குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர், எத்தனை குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்களை அரசு வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு,

பலாத்காரம்
2013ம் ஆண்டில் நாட்டிலேயே மத்திய பிரதேசத்தில் தான் அதிகபட்சமாக 2 ஆயிரத்து 112 குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தை அடுத்து உத்தர பிரதேசத்தில் 1381 குழந்தைகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். நாகாலாந்தில் குறைந்தபட்சமாக 3 குழந்தைகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

கொலை
2013ம் ஆண்டில் உத்தர பிரதேசத்தில் தான் அதிகபட்சமாக 482 குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அடுத்ததாக மத்திய பிரதேசத்தில் 114 குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கோவா, புதுச்சேரி, சிக்கிம், நாகாலாந்தில் குழந்தைகள் யாரும் கொலை செய்யப்படவில்லை.

கடத்தல்
நாட்டிலேயே உத்தர பிரதேசத்தில் தான் அதிகமாக 6 ஆயிரத்து 2 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து டெல்லியில் 5 ஆயிரத்து 809 பேரும், மத்திய பிரதேசத்தில் 2 ஆயிரத்து 262 பேரும் கடத்தப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக மிசோரமில் 2 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு
2013ம் ஆண்டில் தமிழகத்தில் 419 குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 83 குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தவிர 499 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர்.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications