பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி வாட்ச்மேனால் சீரழிப்பு
ஜம்ஷெட்பூர்: ஜம்ஷெட்பூரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் காயம் அடைந்த 15 வயது சிறுமி மருத்துவமனையில் வாட்ச்மேனால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்ஷெட்பூர் அருகே உள்ள பர்சுதி என்ற பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை சிறுவன் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதையடுத்து அந்த சிறுமி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சிறுமியின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை சிறார் திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலாத்காரம் செய்யப்பட்டதில் காயம் அடைந்த சிறுமியை போலீசார் அரசு நடத்தும் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் வேலை செய்யும் வாட்ச்மேன் நேற்று முன்தினம் இரவு சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
வாட்ச்மேன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications