காஷ்மீரில் அடுத்த பரபரப்பு.. அதிரடி படை வீரர்களை களமிறக்கிய இந்திய ராணுவம்.. பதற்றம்!
காஷ்மீர் மாநிலம் பூன்ச் பகுதியில் திடீர் என்று அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு வருவதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் பூன்ச் பகுதியில் திடீர் என்று அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு வருவதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
காஷ்மீரை நோக்கி கடந்த சில நாட்களாக இந்திய ராணுவப்படை குவிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் அங்கு 75 ஆயிரம் வீரர்கள் புதிதாக களமிறக்கப்பட்டு உள்ளனர்.

இனி வரும் நாட்களில் இன்னும் கூடுதலாக துணை ராணுவப்படை வீரர்கள் அங்கு களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சென்ற வாரம் மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீர் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது அங்கு வீரர்கள் தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீரை மத்திய அரசு மூன்றாக பிரிக்க முயற்சி செய்கிறது என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளது.
காஷ்மீர் மாநிலத்திற்குள் மத்திய அரசு பெரிய நடவடிக்கை எதையோ எடுக்க போகிறது என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தற்போது காஷ்மீர் மாநிலம் பூன்ச் பகுதியில் திடீர் என்று அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு வருவதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
மிகவும் இக்கட்டான நிலையில் மட்டுமே அமைதியை நிலைநாட்ட இது போன்ற பாதுகாப்பு படையின் ஒரு பிரிவான அதிரடிப்படையினர் களமிறக்கப்படுவார்கள். மக்கள் கிளர்ச்சியை தடுக்க உதவ அதிரடிப்படையினர் களமிறக்கப்படுவார்கள்.
ஆனால் அப்படிப்பட்ட அதிரடிப்படையினர் காஷ்மீரில் அமைதி நிலவும் இந்த நேரத்தில் களமிறக்கப்பட்டு இருக்கிறார்கள். மத்திய அரசு பூன்ச் பகுதியில் எதையோ செய்ய இருக்கிறது. அதனால்தான் அதிரடிப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications