ஹைதராபாத்: ரேவ் பார்ட்டியில் கவர்ச்சி ஆட்டம் போட்ட 30 பேர் கைது
ஹைதராபாத்: ஹைதரபாத்தில் உள்ள கெஸ்ட் ஹவுசில் ரேவ் பார்ட்டியில் பங்கேற்று கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட்ட 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இன்றைய இளைஞர்களிடையே ரேவ் பார்ட்டி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அதிர வைக்கும் இசை, லேசாக மிளிரும் லேசர் விளக்கு, உயர்தர மது மற்றும் சட்டவிரோத போதைப் பொருட்களுடன் ஆரவார காட்சிகள் அரங்கேறும் கச்சேரிதான் `ரேவ் பார்ட்டி'. ஆண்களும், பெண்களும் பேதமில்லாமல் இப்படி ஆடிப்பாடி கும்மாளமடிப்பது இளவட்டங்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது.

3 ஆயிரம் ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை நுழைவுக் கட்டணம் வசூலிக்கிறார்கள். இவ்வளவு பணம் செலவழித்து இளசுகள் இந்த ரேவ் பார்ட்டியில் மயங்கிக் கிடப்பதற்கு வேறு சில காரணங்களும் உண்டு. இங்கு கிடைக்கும் வசதிகளோ ஏராளம், எதை எதை எல்லாம் `அனுபவிக்கிறார்களோ' அதற்கு தக்கபடி கூடுதல் கட்டணமும் உண்டு என்கின்றனர். போதைக்கு ஆசிட் ஊசிகளும் இங்கு பயன்படுத்துவது உண்டாம்.
எனவேதான் ஹைதராபாத் நகரில் கெஸ்ட் ஹவுஸ்களில் அடிக்கடி காவல்துறையினர் அடிக்கடி சோதனை மேற்கொள்கின்றனர். அவ்வப்போது ஏராளமானோர் கைது செய்யப்பட்டாலும் ரேவ் பார்ட்டிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
செவ்வாய்கிழமையன்று மொய்னாபாத் பகுதியில் நடைபெற்ற ஆபரேசனில் 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 22 ஆண்கள் 8 பெண்களை கைது செய்த போலீசார் 5 கார்கள், 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தையும் மது பாட்டில்கள், இசைக்கருவிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
பெண்களும், ஆண்களும் மும்பையிலிருந்து வந்து பார்ட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்த ரேவ் பார்ட்டியின் ஒருங்கிணைப்பாளர் திலீப் ஜெயின் என்பவரை கைது செய்த போலீசார், அவர் மீது கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications