மோடி சட்டையை மாற்றுவதை போல் ‘ரிசர்வ் வங்கி’ விதிமுறைகளை மாற்றி வருகிறது - ராகுல்காந்தி தாக்கு
மோடி சட்டையை மாற்றுவதை போல் ரிசர்வ் வங்கி தனது விதிமுறைகளை மாற்றுகிறது என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
டெல்லி: பிரதமர் மோடி தனது சட்டையை மாற்றுவது போல், பண ரத்து நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மாற்றி வருகிறது என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதை தொடர்ந்து மக்கள் தங்களிடம் உள்ள பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகிறார்கள்.

இதையடுத்து ரூபாய் நோட்டு விவகாரத்தில் தொடர்ந்து பல்வேறு நிபந்தனைகளை நாள்தோறும் மத்திய அரசு அறிவித்து வருகிறது.இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது சட்டையை மாற்றுவது போல், பண ரத்து நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மாற்றி வருகிறது என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த செய்தியை அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications