தடாலடியாக 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்க தேவை என்ன?: ரிசர்வ் வங்கி கவர்னர் பேட்டி
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் கள்ள நோட்டுப் புழக்கம் முற்றிலும் ஒழியும் என ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் கூறியுள்ளார்.
டெல்லி: நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் கள்ள நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது நள்ளிரவு முதல் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதனையடுத்து நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்தது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் கூறியதாவது:

நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் கள்ள நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. கள்ளநோட்டு புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க இந்த அறிவிப்பு உதவும். இதன் மூலம் மக்களின் பணத்திற்கு பாதுகாப்பு குறைபாடு இல்லை. போதிய எண்ணிக்கையில் புதிய ரூபாய் நோட்டுகள் தயாராக இருப்பதாகவும். புதிய நோட்டுக்கள் அனைத்தும் 10 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து பொருளாதார விவகார துறை செயலர் சக்திகந்தா தாஸ் கூறுகையில், மத்திய அரசு எடுத்துள்ள துணிச்சலான முடிவு இது, இந்த நடவடிக்கை மூலம் கள்ள நோட்டு உபயோகம் பயங்கரவாதிகள் கையில் பணப்புழக்கம் அதிகரித்ததை தவிர்க்க முடியும். 2006 முதல் 2011 வரை 500 ரூபாய் கள்ள நோட்டுக்களின் புழக்கம் 76 சதவீதம் அதிரித்த்துள்ளது. அதேபோல் 1000 ரூபாய் கள்ளநோட்டின் புழக்கம் 109 சதவீதம் அதிரித்ததாக கூறப்படுகிறது. மேலும் புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் வரும் 10 ம் தேதி முதல் புழக்கத்தில் விடபடும் என்று கூறியுள்ளார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications