தடாலடியாக 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்க தேவை என்ன?: ரிசர்வ் வங்கி கவர்னர் பேட்டி
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் கள்ள நோட்டுப் புழக்கம் முற்றிலும் ஒழியும் என ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் கூறியுள்ளார்.
டெல்லி: நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் கள்ள நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது நள்ளிரவு முதல் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதனையடுத்து நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்தது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் கூறியதாவது:

நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் கள்ள நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. கள்ளநோட்டு புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க இந்த அறிவிப்பு உதவும். இதன் மூலம் மக்களின் பணத்திற்கு பாதுகாப்பு குறைபாடு இல்லை. போதிய எண்ணிக்கையில் புதிய ரூபாய் நோட்டுகள் தயாராக இருப்பதாகவும். புதிய நோட்டுக்கள் அனைத்தும் 10 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து பொருளாதார விவகார துறை செயலர் சக்திகந்தா தாஸ் கூறுகையில், மத்திய அரசு எடுத்துள்ள துணிச்சலான முடிவு இது, இந்த நடவடிக்கை மூலம் கள்ள நோட்டு உபயோகம் பயங்கரவாதிகள் கையில் பணப்புழக்கம் அதிகரித்ததை தவிர்க்க முடியும். 2006 முதல் 2011 வரை 500 ரூபாய் கள்ள நோட்டுக்களின் புழக்கம் 76 சதவீதம் அதிரித்த்துள்ளது. அதேபோல் 1000 ரூபாய் கள்ளநோட்டின் புழக்கம் 109 சதவீதம் அதிரித்ததாக கூறப்படுகிறது. மேலும் புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் வரும் 10 ம் தேதி முதல் புழக்கத்தில் விடபடும் என்று கூறியுள்ளார்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications