Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் - மத்திய அரசை மறைமுகமாக சாடும் ரகுராம் ராஜன்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எந்த விஷயத்திலும் திணிப்பு இருக்கக் கூடாது. மாற்றுக் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என ரிசர்வ் பேங்க் கவர்னர் ரகுராம் ராஜன் மத்திய அரசை மறைமுகமாக சாடியிருக்கிறார்.

டெல்லி ஐ.ஐ.டி.யில் நடந்த விழாவில் பங்கேற்று அவர் பேசுகையில், நாட்டில் கருத்து சுதந்திரம், விவாதம், மற்றும் சுய உரிமை இவை யாவும் அவசியம் இவை பராமரிக்கப்படும் போது பொருளாதார வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் உணர்வுப்பூர்வமான விஷயத்தில் மதிப்பளிக்கப்பட வேண்டும்.

Rbi governor says, Forcing should not be in any case

சகிப்புத் தன்மையும், ஒருவருக்கொருவர் வழங்கும் மதிப்பும் நல்ல சமத்துவ சூழலை உருவாக்கும். ஒரு விஷயத்தில் தடை என்பது யாருக்கும் தீர்வாக மாற முடியாது. அரசியல் ரீதியான தவறான வழிகாட்டுதல்கள் வளர்ச்சிக்கு தடையாக அமைந்து விடும். இந்திய கலாச்சாரம் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.

சகிப்புத் தன்மைக்கும், சுதந்திரத்திற்கும் போராட வேண்டியது அவசியம். சகிப்புத் தன்மையின்மை, பாதுகாப்பின்மைக்கு சமமாகும். எந்த விஷயத்திலும் திணிப்பு இருக்க கூடாது. மாற்று கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று கூறினார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றதில் இருந்து ஹிந்தி திணிப்பு, யோகா தினம் உள்ளிட்ட விவகாரங்களில் தொடங்கி தற்போது பூதாகரமாக வெடித்திருக்கும் மாட்டிறைச்சி விவகாரம், விருதுகளை திரும்ப ஒப்படைக்கும் எழுத்தாளார்கள், சகிப்புத் தன்மை குறைவு, கருப்பு மை வீச்சு ஆகிய சம்பவங்கள் தொடர்பாக அவர் இவ்வாறு மறைமுகமாக மத்திய அரசை சாடியிருக்கலாம் என கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+