For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதிய ரூ50, ரூ20 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும்- பழைய நோட்டுகளுக்கு தடை இல்லை: ரிசர்வ் வங்கி

புதிய ரூ50, ரூ20 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: புதிய ரூ50, ரூ20 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதே நேரத்தில் பழைய ரூ50, ரூ20 நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் நவம்பர் 8-ந் தேதி புழக்கத்தில் இருக்கும் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளனர்.

RBI to shortly issue Rs50, Rs 20 notes

மேலும் புதியதாக ரூ2,000 மற்றும் ரூ500 நோட்டுகளும் வெளியிடப்பட்டன. இருப்பினும் அதிகளவு இந்த ரூபாய் நோட்டுகள் கிடைக்காததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் புதியதாக ரூ50, ரூ20 நோட்டுகள் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வெளியிடப்பட உள்ள 20 ரூபாய் நோட்டில் L உடன் புதிய வரிசை எண் அச்சிடப்படுகிறது.

அதே நேரத்தில் தற்போதைய ரூ50, ரூ20 நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

English summary
RBI to shortly issue Rs50, Rs 20 notes. All Rs50, Rs20 notes issued in past will continue to be legal tender.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X