இரண்டு வாக்குச்சாவடிகளிலும் அமைதியாக நடந்து முடிந்தது மறுவாக்குப்பதிவு – நாளை ரிசல்ட்!
டெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதான இரண்டு வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் இன்று மீண்டும் அமைதியான முறையில் மறுவாக்குப் பதிவு நடைபெற்றது.
டெல்லியில் நேற்று முன்தினம் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது.இதில் இரு ஓட்டுச்சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதை தேர்தல் பார்வையாளர்கள் கண்டறிந்தனர்.

அதனையடுத்து டெல்லி கண்டோன்மெண்ட் மற்றும் ரோக்தாஸ் நகரில் இன்று மறுவாக்குப் பதிவு நடைபெற்றது.
தேர்தலன்று வாக்குப் பதிவு இயந்திரங்கள் பதிவான வாக்குகளை விட அதிகமாக காட்டியதாலும், எண்களை சரியாக காட்டததாலும் இவ்வாக்குச்சாவடிகளில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
இரண்டு வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. வாக்கு இயந்திரங்களில் எந்த பழுதும் ஏற்படவில்லை. நாளை நடக்க இருக்கின்ற வாக்கு எண்ணிக்கையிலேயே இந்த இரண்டு வாக்குச்சாவடிகளின் வாக்குகளும் எண்ணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications