திருப்பதியில் துப்பாக்கி சூடு.. செம்மரம் வெட்டியதாக 4 தமிழர்கள் கைது
திருப்பதி: திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டியவர்களை பிடிப்பதற்காக காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
திருப்பதி அருகே உள்ள சேஷாச்சல வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிரடிப்படை எஸ்.ஐ. பாஸ்கர் தலைமையில் போலீசார் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அக்கன்ன தோனா வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி தோலில் சுமந்தபடி
வந்தவர்களை, போலீசார் சரணடையும்படி தெரிவித்ததாகவும், ஆனால், அவர்கள் போலீசார்
மீது கற்கள், கொம்புகள், கோடாரிகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், செம்மரங்களை வெட்டிய 40க்கும் மேற்பட்டோர் தப்பியோடியதாகவும், 4 தமிழர்கள் மட்டும் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கைதான 4 பேரிடமிருந்தும் 50 லட்சம் மதிப்புள்ள 33 செம்மரங்கள் பிடிபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications