2ஜி வழக்கை கண்காணித்து வரும் சிபிஐ அதிகாரியை மாற்றியது சரியல்ல- சுப்ரீ்ம் கோர்ட்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை கண்காணித்து வந்த சிபிஐ அதிகாரி சந்தோஷ் ரஸ்தோகியை மாற்றியுள்ளது சரியான செயலாகத் தெரியவில்லை. அப்படி நடந்திருந்தால் அதை சிபிஐ சரி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.
ரஸ்தோகி டிஐஜி அந்தஸ்திலான அதிகாரி ஆவார். அவரது மாற்றம் குறித்த செய்தி மிகக் கடுமையானது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இதுகுறித்து நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் கூறுகையில், இதை சிபிஐ சரி செய்ய வேண்டும் என்று சிபிஐ வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டது.
2ஜி வழக்கை மேற்பார்வையிட்டு வந்தவர் ரஸ்தோகி. அவரை திடீரென சிபிஐ அப்பொறுப்பிலிருந்து மாற்றியுள்ளது. இதுகுறித்து சிபிஐஎல் என்ற என்ஜிஓ நிறுவனத்தின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் நீதிபதிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
அப்போது, ரஸ்தோகியை 2ஜி வழக்குலிருந்து குற்றப் பிரிவுக்கு சிபிஐ மாற்றியுள்ளதாக பூஷன் குறிப்பிட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து விசாரணை அதிகாரிகளும், உச்சநீதிமன்ற அனுமதி இல்லாமல் மாற்றம் செய்யப்படக் கூடாது என்று கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதை மீறி சிபிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று பூஷன் வாதிட்டார்.
இதையடுத்து இது மிகவும சீரியஸான விஷயம். இப்படி நடந்திருந்தால் அதை உடனடியாக சிபிஐ சரி செய்ய வேண்டும் என்று சிபிஐ வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலுக்கு நீதிபதிக் உத்தரவிட்டனர். மேலும் பூஷன் சொல்வது தொடர்பான அனைத்து ஆவணங்களையும், கோப்புகளையும் தாக்கல் செய்யுமாறும் சிபிஐக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தொடர்ந்து ரஸ்தோகி கோர்ட்டுக்கு வருவது வழக்கம். ஆனால் அவர் நேற்று வரவில்லை. இதைத்தான் பூஷன் சுட்டிக் காட்டி முறையிட்டார்.












Click it and Unblock the Notifications