மருத்துவ படிப்பிற்கு தமிழக அரசு 85% இட ஒதுக்கீடு.. தலையிட மறுத்த சுப்ரீம் கோர்ட்
டெல்லி: தமிழக அரசின் இடஒதுக்கீடு நீட்தேர்வை பாதிக்காது என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. எனவே, மருத்துவபடிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்தோருக்கு 85% ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இது சிபிஎஸ்சி பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே,
தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து சிபிஎஸ்சி மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரினர். ஆனால் இன்று அந்த வழக்கை முடித்துவைத்தது உச்ச நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது, என்றும், உயர்நீதிமன்றத்திலேயே இப்பிரச்சினைக்கு முடிவு காணும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications