வாடிக்கையாளரை பலாத்காரம் செய்ய முயன்ற ஹோம் டெலிவரி செய்ய வந்த ஹோட்டல் ஊழியர்
மும்பை: மும்பையில் ஹோட்டலிலிருந்து ஹோம் டெலிவரி செய்ய வந்த ஊழியர், வீட்டில் தனியாக இருந்த 21 வயது பெண்ணைக் கையைப் பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்பெண் போட்ட கூச்சலால் பயந்து போன ஊழியர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். ஆகஸ்ட் 23ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த நபரின் பெயர் கன்யாலால் கலால். 40 வயதான இவர் ஒரு ஹோட்டலில் பணியாற்றி வருகிறார். அந்த ஹோட்டலில் இந்தப் பெண் சில உணவு வகைகளை ஆர்டர் செய்தார். அந்த உணவுகளுடன் கலால் ஹோம் டெலிவரிக்காக வந்தார்.

அப்போது இரவு மணி எட்டரையாகும். வீட்டில் தனியாக இருந்த பெண்ணைப் பார்த்ததும் கலால், சேட்டையில் இறங்கினார். உணவு வாங்கி வைத்து விட்டு வீட்டுக்குள் சென்று பணத்தை எடுத்துக் கொண்டிருந்தபோது பின்னாலேயே வந்த அந்த நபர், அப்பெண்ணிடம் செக்ஸ் சேட்டையில் இறங்கினார். தனது பேன்ட்டை இழுத்து விட்டு ஆபாசச் செயலில் ஈடுபட்டார். இதைப் பார்த்த அந்தப் பெண் கத்திக் கூச்சல் போட்டார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதைப் பார்த்த அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். தற்போது அந்த நபரைப் போலீஸார் தேடி வருகின்றனர். கலால் 3 நாட்களுக்கு முன்புதான் இந்த ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்துள்ளாராம். கலால் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. அவர் ஒரு இடத்தில் நிலையாக வேலை பார்த்ததில்லையாம்.












Click it and Unblock the Notifications