ஜீரோ டூ ஹீரோ! தெலுங்கானாவில் காங்கிரசை செதுக்கியவர்! முதல்வராகும் ரேவந்த் ரெட்டி..யார் இவர்? பின்னணி
ஐதராபாத்: தெலுங்கனாவின் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்த நிலையில், அம்மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்க உள்ளார். ஏபிவிபியில் தனது பயணத்தை தொடங்கிய ரேவந்த் ரெட்டி பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்
ஆந்திராவில் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு தெலுங்கனா தனி மாநிலமாக உருவானது. அந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சந்திரசேகர் ராவ் வெற்றி பெற்றார்.அதேபோல் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் சந்திரசேகர் ராவின் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியே வென்றது. அந்த தேர்தலில் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி 94 இடங்களில் வென்று அமோக ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சி வெறும் 19 இடங்களில் மட்டுமே வென்றது.

ஜீரோவில் இருந்து ஹீரோவாக: காங்கிரஸ் கட்சி வெறும் 19 இடங்களில் மட்டுமே 2018 ஆம் ஆண்டு தேர்தலில் வென்றாலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதாவது அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 60 தொகுதிகளுக்கும் மேல் வென்று ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியை தெலுங்கானாவில் ஜீரோவில் இருந்து ஹீரோவாக மாற்றியவராக அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரேவந்த் ரெட்டி பார்க்கப்படுகிறார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான ஏபிவிபியில் தனது பயணத்தை ரேவந்த் ரெட்டி தொடங்கியிருக்கிறார். 2007 ஆம் ஆண்டு சுயேட்சை எம்.எல்.சியாக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். பின்னர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார். பின்னர் அக்கட்சியில் இருந்து 2017 ஆம் ஆண்டு ரேவந்த் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
நல்ல ஆதரவு: கட்சியில் சேர்ந்த 4 ஆண்டுகளில் மாநில தலைவர் பொறுப்பும் அவரை தேடி வந்தது. அப்போது முதல் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த தீவிரமாக உழைத்தார். அதேவேளையில், ரேவந்த் ரெட்டி சர்வாதிகாரமாக செயல்படுவதாகவும் கட்சியினர் மத்தியில் பரவலாக குற்றம் சாட்டப்பட்ட்டது. அதுபோக தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே கட்சியில் முன்னுரிமை அளிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் களப்பணியில் ரேவந்த் ரெட்டி தீவிரம் காட்டினார். ஒருநாளில் 4 பொதுக்கூட்டங்களில் கூட கலந்து கொண்டு தீவிரமாக கட்சி பணியாற்றினார். ரேவந்த் ரெட்டியை மாநில தலைவராக அவரது இந்த கடின உழைப்பு உயர்த்தியது. ரேவந்த் ரெட்டிக்கு ராகுல் காந்தி போன்ற காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் மத்தியிலும் நல்ல ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகிறது.
எதிர்ப்புகள்: எனினும், சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு அவருக்கு எதிராக கட்சிக்குள் கலக குரல் எழுந்தன. தெலுங்கானா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் உத்தம் குமார் ரெட்டி உள்ளிட்ட்ட சில கட்சியின் மூத்த தலைவர்களும் முதல்வர் ரேசில் இருப்பதாக சொல்லப்பட்டது. இருந்தாலும் முதல்வர் ரேசில் ரேவந்த் ரெட்டியே வெற்றி பெற்று இருக்கிறார். ரேவந்த் ரெட்டி கடந்த 2020 ஆம் ஆண்டு " டிரோனை' சட்ட விரோதமாக பயன்படுத்திய குற்றச்சாட்டினால் கைதும் செய்யப்பட்டார்.
அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானதாக சொல்லப்பட்ட கட்டிடத்தை சட்ட விரோதமாக படம் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் சேர் ந்த சில ஆண்டுகளில் மாநில தலைவர் தற்போது முதல்வர் பொறுப்பு வரை உயர்ந்து இருக்கும் ரேவந்த் ரெட்டிக்கு எதிராக கட்சிக்குள் எதிர்ப்புகளும் இருப்பதாக சொல்லப்படுகிறது. உத்தம் குமார் ரெட்டி, ஜெயபிரகாஷ் ரெட்டி, ஹனுமந்த ராவ்,மது யாக்ஷி கவுட், ஷஷிதர் ரெட்டி, கீதா ரெட்டி ஆகியோருக்கும் ரேவந்த் ரெட்டிக்கு எதிரான கோஷ்டியில் இருப்பதாக கட்சி வட்டாரங்க்ள் சொல்கின்றனர்
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications