கொல்கத்தாவில் பயங்கர மோதல்... பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மீது வழக்குப்பதிவு
Recommended Video
கொல்கத்தா: மேற்கு வங்காளம் தலைநகர் கொல்கத்தாவில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
42 நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு வங்க மாநிலத்தில் 7 வது கட்ட தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே 6 கட்டத் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, அந்த மாநிலத்தில் மீதமுள்ள 9 தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது.
ஜாதவ்பூரில் அமித்ஷா கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கொல்கத்தாவில் நேற்று மாலை பிரமாண்ட பேரணி நடந்தது, அப்போது தொண்டர்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
பாதி வழியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக் கொடிகளை காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, கல்வீச்சு சம்பவமும் நடந்தது. இதில், பலர் காயமடைந்தனர்.
மேலும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இதனையடுத்து, கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதனால், அந்த பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.
குஷ்பு இட்லி, ஓவியா இட்லின்னு பேர் வெச்சாதான் சாப்பிட தோணுது.. சிவப்பா இருந்தா மோகம்.. சீமான் வேதனை
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மாறி, மாறி பரஸ்பர புகார் அளித்தனர். இந்நிலையில் கலவரம் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மீது 2 பிரிவுகளில் கீழ் கொல்கத்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.