குடகு ...கொட்டி தீர்க்கும் ராட்சச மழை...இன்று மாலை பெரு வெள்ளம் ஏற்படும்...எச்சரிக்கை!!
குடகு: கர்நாடகா மாநிலம் குடகு பகுதியில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதுவரை பெய்தது கன மழை என்றால், இன்று மாலை அதி கன மழை பெய்து வெள்ளம் ஏற்பட இருப்பதாக மத்திய நீர் வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மத்திய நீர் வள ஆணையம் வெளியிட்டு இருக்கும் தகவலில், ''குடகு மாவட்டடத்தில் நபொக்லு என்ற இடத்தில் காவிரி ஆற்றில் தண்ணீர் மட்டத்தின் உயரம் அதிகரித்து வருகிறது. தற்போது 0.6 எம் என்ற உச்சபட்ச அளவில் இருக்கிறது. பாகமந்தலா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை அதிகமாக பெய்து வருகிறது. உடனடியாக வெள்ளம் குறைவதற்கான வாய்ப்பு இல்லை. இன்று மாலை மிக கன மழை பெய்து பெரிய அளவில் குடகுவில் வெள்ளம் ஏற்படும்'' என்று எச்சரித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியில் இருந்து இன்று 7 ஆம் தேதி வரை குடகு பகுதியில் 105 செ. மீட்டர் மழை பெய்துள்ளது. தொடர்ந்து இப்படி மழை பெய்தால் நூறு ஆண்டுகள் சாதனையை இந்த மழை முறியடிக்கும் என்று தமிழ்நாடு வெதர் மேனும் பதிவிட்டுள்ளார். இந்தப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பீமா ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. பெலகாவியில் விவசாய நிலங்களில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது.
இதேபோல் கேரளாவின் பல்வேறு இடங்களில் பயங்கர மழை கொட்டித் தீர்த்து வருகிறது. வயநாடு பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களாக 370 எம்எம் 530 எம்எம், 280 எம்எம் மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் இன்று பெய்த மழையில் மூணாறில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் 13 பேர் உயிரிழந்தனர்.
கேரளாவில் பெரியார் ஏரியில் இருக்கும் சிவன் கோயில் மூழ்கியுள்ளது. பல அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மீண்டும் கேரளா வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் பதனம்திட்டா, கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

காவேரி ஆற்றில் இருந்து வினாடிக்கு 16000 திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டலு வந்தடைந்துள்ளது. கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் தமிழகத்துக்கு அதிகளவில் தண்ணீர் வரத்து இருக்கிறது. நீலகிரியில் இருக்கும் முக்குர்த்தி அணைக்கு கடந்த நான்கு நாட்களில் 326 எம்எம் தண்ணீர் வந்துள்ளது. இங்கு 1500 எம்எம் மழை பெய்துள்ளது. வால்பாறையில் இருக்கும் சோலையாறு அணை, காடம்பாறை அணை, அப்பர் ஆழியாறு, துண்ணக்கடவு அணை ஆகியவையும் நிறைந்துள்ளன. பவானி சாகர் அணையும் நிறைந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications